புதன், 4 ஏப்ரல், 2018

நள வெண்பா - இசை கேட்டு உறங்கிய எருமை

நள வெண்பா - இசை கேட்டு உறங்கிய எருமை

எருமை.
மந்த புத்தி மகிஷம்.
வெயில் என்றாலும் விலகாது.
மழை வந்தாலும் மயங்காது.
என் வழி தனி வழி என்று அதன் வழி செல்லும்.
அவந்தி நாட்டில் அப்படி ஒரு எருமை. 
அதற்கு ஒரு நாள் ரொம்ப பசி. மாட்டிற்கும் யானைக்கும் உடல் எல்லாம் வயிறு தானே.
எதை தின்னலாம் என்று சுற்றிலும் பார்த்தது. எதிரிலே ஒரு குளம். அதிலே 
ஒரு குவளை மலர்.
அந்த மலரை பறித்து உண்ணலாம் என்று குளத்தில் இறங்கி மலரை வாயில் கவ்வியது.
அப்போது அந்த மலரில் இருந்த வண்டுகள் வெளியே தப்பி வந்து ரீங்காரமிட்டன.
அந்த இசையில் மயங்கி மலரை உண்ணாமல் விட்டது அந்த எருமை.
அப்படி எருமைக்குக் கூட இசை ஞானம் இருக்கும் ஊர் அவந்தி.
அந்த நாட்டின் தலைவன் இந்த மன்னன்...பெரிய யானையின் வலிமையையை கொண்டவன் இவன் என்று அவந்தி நாட்டின் மன்னனை தமயந்திக்கு அறிமுகப் படுத்துகிறாள் அவளுடைய தோழி...

வண்ணக் குவளை மலர் வௌவி வண்டு எடுத்த
பண்ணில் செவி வைத்துப் பைங்குவளை உண்ணாது
அரும் கடா நிற்கும் அவந்தி நாடு ஆளும்
இரும் கடா யானை இவன்

தழுவாத போது....


நந்திக் கலம்பகம் - தழுவாத போது....

அவளை விட்டு நீங்கினால் சுடுகிறது, அவ கிட்ட போனால் குளிர்கிறது..இந்த வினோத தீயை இவள் எங்கு பெற்றாள் என்று வியக்கிறார் வள்ளுவர்.
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் 
தீயாண்டுப் பெற்றாள் இவள்?
கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் என்னை விட்டு தனியே கானகம் போகிறேன் என்று சொல்கிறாயே, அந்த ஊழிக் கால தீ கூட உன் பிரிவை விட அதிகமாக சுடாது, "நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?" என்று பிரிவினால் வரும் சூட்டினை சொல்கிறார் கம்பர்.
பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள்."
நந்திக் கலம்பகத்தில் காதலனை பிரிந்த காதலி, பிரிவின் வெம்மையால் தவிக்கிறாள். அவள் தோழிகள் அவள் மேல் கொஞ்சம் குளிர்ந்த சந்தனத்தை எடுத்து பூசுகிறார்கள். அது என்னவோ அவளுக்கு தீயை அள்ளி பூசிய மாதிரி இருக்கிறதாம்.....
செந்​தழ​லின் சாற்​றைப் பிழிந்து செழுஞ்​சீ​தச்
சந்​த​ன​மென் றாரோ தட​வி​னார்-​பைந்​த​மிழை
ஆய்​கின்ற கோன்​நந்தி ஆகம் தழு​வா​மல்
வேகின்ற பாவி​யேன் மேல்'

காதலியின் இறுதி வாசகம்.

காதலியின் இறுதி வாசகம். உன்னைதான் வேண்டும் உண்மையைச் சொல்லியும்  துரோகிதான்! வீட்டிற்கும்  உன்னினைவால் அவருக்கும். நம்    நினை...