புதன், 4 ஏப்ரல், 2018

தழுவாத போது....


நந்திக் கலம்பகம் - தழுவாத போது....

அவளை விட்டு நீங்கினால் சுடுகிறது, அவ கிட்ட போனால் குளிர்கிறது..இந்த வினோத தீயை இவள் எங்கு பெற்றாள் என்று வியக்கிறார் வள்ளுவர்.
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் 
தீயாண்டுப் பெற்றாள் இவள்?
கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் என்னை விட்டு தனியே கானகம் போகிறேன் என்று சொல்கிறாயே, அந்த ஊழிக் கால தீ கூட உன் பிரிவை விட அதிகமாக சுடாது, "நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?" என்று பிரிவினால் வரும் சூட்டினை சொல்கிறார் கம்பர்.
பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள்."
நந்திக் கலம்பகத்தில் காதலனை பிரிந்த காதலி, பிரிவின் வெம்மையால் தவிக்கிறாள். அவள் தோழிகள் அவள் மேல் கொஞ்சம் குளிர்ந்த சந்தனத்தை எடுத்து பூசுகிறார்கள். அது என்னவோ அவளுக்கு தீயை அள்ளி பூசிய மாதிரி இருக்கிறதாம்.....
செந்​தழ​லின் சாற்​றைப் பிழிந்து செழுஞ்​சீ​தச்
சந்​த​ன​மென் றாரோ தட​வி​னார்-​பைந்​த​மிழை
ஆய்​கின்ற கோன்​நந்தி ஆகம் தழு​வா​மல்
வேகின்ற பாவி​யேன் மேல்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதலியின் இறுதி வாசகம்.

காதலியின் இறுதி வாசகம். உன்னைதான் வேண்டும் உண்மையைச் சொல்லியும்  துரோகிதான்! வீட்டிற்கும்  உன்னினைவால் அவருக்கும். நம்    நினை...